Thursday, November 22, 2018

வடிவியல்

6- ம் வகுப்பு :


          செங்குத்துக்கோடுகள்  வரைதல்



    நம்முடைய உயரத்தை அளக்க சுவரின் பக்கத்தில் நிற்க வைத்து செங்குத்தாக கோடு வரைய செங்குத்து கோடுகளை பயன்படுத்துவோம்.

செங்குத்து கோடுகள் :






மூலைமட்டங்கள் : 


                     கணித உபகரணப்பெட்டியில் முக்கோண வடிவில் இரண்டு மூலைமட்டங்கள் உள்ளன.
    
              ஒவ்வொரு மூலைமட்டத்திலும் ஒரு செங்கோணம் உள்ளது.
      
              ஒரு மூலைமட்டத்தின் கோணங்கள் 30° ,60° , 90°  எனவும் மற்றொரு மூலைமட்டத்தின் கோணங்கள் 45°, 45°, 90° எனவும் இருக்கும் .

             செங்கோணத்தை உருவாக்கும் இரண்டு விளிம்புகளிலும் சென்டிமீட்டரில் அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும்.



            மூலைமட்டத்தை பயன்படுத்தி ஒரு கோட்டின் மீது ஒரு புள்ளியில் இருந்து அக்கோட்டிற்கு செங்குத்து கோடு வரையும் முறையும் முறையை மாணவர்களுக்கு கூறினேன்.

No comments:

Post a Comment